இலங்கையின் வடபகுதியில் உள்ள அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயங்களும் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆரம்ப காலம் சிலப்பதிகார காலத்தையொட்டியது என்பது வரலாறு. இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டி நாட்டில் அரசனுக்கு எதிராக வழக்காடி மதுரையை எரித்த பின்னர் அவளின் கோபாவேசம் அடங்குவதற்காக இலங்கையின் கரையோரமாக வருகை தந்து பல இடங்கில் அமர்ந்திருந்து பத்தாவது இடமாக வற்றாப்பளை நந்திக்கடலில் வெளியில் இடைச்சிறுவர்களுக்கு காட்சி தந்து அவர்களுடைய பொங்கலை ஏற்றுக் கொண்டாள். புpன்னர் ஒவ்வொரு வைகாசி விசாகத்திற்கும் தான் அங்கு வருவதாகக் கூறி மறைந்தார் என்பது ஐதீகம். அதையொட்டி ஒவ்வொரு வைகாசி விசாகத்தன்றும் பக்தர்கள் பெருந்தொகையாகக் கூடிப் பொங்கல் பொங்கிப் படைத்து அம்மன் அருளைப் பெற்று ஏகுகிறார்கள்.