பல மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பலர் பல உதவிகளை கேட்டுள்ளார்கள். எம்மால் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. அதனால் எமக்கு தெரிந்தவர்களின் உதவிகளை நாடி நிற்கிறோம்.
1. ஒரு பாடசாலையில் 115 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்களே. அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கினோம். ஒரு மாணவனுக்கு 5 பொப்பி வீதமே வழங்க எம்மால் முடிந்தது. அவர்களுக்கு 8 பாடங்கள். இன்னும் 3 கொப்பிகள் வீதம் 115 மாணவர்களுக்கும் வழங்க வேண்டியுள்ளது.
2. மேலே குறிப்பிட்ட 27 மாணவர்களும் 17 குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒரு குடும்பத்திற்கு எம்மால் வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு இயன்ற உதவியினை வழங்கும்படி கேட்டு நிற்கிறார்கள்.
3. வேறு பாடசாலை மாணவர்கள் பலர் புத்தகப்பைக்கு விண்ணப்பித்தனர். எம்மால் 80 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் வேறு 83 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்க முடிந்தது.
இன்னும் பலருக்கு புத்தகப்பை தேவையாகவுள்ளது.
தங்களால் கொடுக்க விரும்பினால் பாடசாலையின் பெயர், அதிபரின் கடிதம், மாணவர்களுக்கு பெற்றோர் பிரச்சனை, கற்பிக்க வசதியற்றவர்கள் என்பதனை உறுதிப்படுத்திய கிராம சேவையாளரின் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.நீங்கள் நேரடியாக உதவலாம்.
முக்கிய குறிப்பு – மேலே வழங்கப்பட்டது என்பதை ஏன் குறிப்பட்டேன் என்றால் மிகுதி தேவையை உடனே செய்ய இயலாதுள்ளமை தான். அடுத்த மாத முற்பகுதிற்குள் இத்தேவைகள் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இத்தேவைகளை நான் பூர்த்தி செய்யவில்லை. என் நண்பர்கள் தான் பூர்த்தி செய்துள்ளனர். உடனே மிகுதியை செய்ய முடியாததால் உதவி செய்ய விரும்பியவர்களுக்காக இதனை அனுப்பி வைக்கிறேன்.
உதவி செய்ய விரும்பியவர்கள் மட்டும் உடனே தங்கள் பதிலை தந்தால் மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்கலாம். நீங்கள் நேரடியாக உதவலாம்.